கடன் தேவையைக் குறைத்த மத்திய அரசு!


நடப்பு நிதியாண்டுக்கான கூடுதல் கடன் தேவையை மத்திய அரசு ரூ.20,000 கோடியாகக் குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ.50,000 கோடியைக் கூடுதல் கடனாகப் பெற ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது வருவாய் விவரங்கள் மற்றும் செலவினங்களைக் கணக்கிட்டு, கடன் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டுக்கான கூடுதல் கடன் தேவை ரூ.20,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை இலக்குக்குள்ளேயே வைத்திருக்க முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2017-18 நிதியாண்டில் பத்திரங்கள் வாயிலாக ரூ.43,000 கோடி கடன் பெற அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.