திருக்குறளை தேசிய நூலாக்க முயற்சி!


உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக்க தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது தமிழகத்தில் மட்டுமல்லாது உலகத்திலுள்ள அனைத்து தமிழர்களின் எண்ணமாக உள்ளது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் இன்று ( ஜனவரி 15) சென்னை மெரினா கடற்கரையிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.