பட்ஜெட்: விவசாயத் துறைக்குக் கூடுதல் நிதி!


2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.8,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிதி சென்ற நிதியாண்டு ஒதுக்கீட்டைவிட 15 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பொருட்டு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு, வேளாண் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டில் அதிகக் கவனம் செலுத்தவுள்ளது. 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயத் துறைக்கு குறைந்தது 10 சதவிகிதம் கூடுதலான அளவு நிதி ஒதுக்கப்பட்டு வந்தநிலையில், இந்த ஆண்டில் 15 சதவிகிதம் கூடுதலான நிதி ஒதுக்கப்படுவதாக வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை தெரிவித்துள்ளது.