பொங்கல்: வாழைத் தார் விலை உயர்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சந்தையில் வாழைத் தார்களின் விலை அதிகரித்துள்ளது. அதேநேரம் கரும்பின் விலை பாதியாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் வாழை உற்பத்தியில் திருச்சி மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சந்தைக்கு வந்துள்ள வாழைத் தார்களின் விலை உயர்ந்துள்ளது. சென்ற வருடம் தமிழகத்தில் மழை இல்லாததால் வாழைத் தார்களின் வரத்து குறைத்துள்ளது. அதனால் வாழைத் தார், வாழைப் பழம் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. திருச்சி சந்தையில் மற்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ள நிலையில் தேங்காய் மற்றும் வாழைப் பழத்தின் விலை அதிகரித்துள்ளது. வாழைத் தார் ஒன்று ரூ.750 லிருந்து ரூ.800 வரையிலும், ஒரு சீப்பு வாழைப் பழம் ரூ.60க்கும் விற்கப்படுகிறது.