தூத்துக்குடியில் பயணிகள் கப்பல் சேவை!


தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என தூத்துக்குடி துறைமுக துணைத் தலைவர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இப்பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவையை மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளதாகவும், முதற்கட்டமாக இக்கப்பலை இயக்க விரும்புபவர்களுக்கான விண்ணப்பம் கோரி அவர்களுடன் கலந்தாய்வு நடத்திய பின்பே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கப்பல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பயணிகள் கப்பலின் கட்டுமானப் பணி குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள சுற்றுலாத் துறையுடன் தூத்துக்குடி துறைமுகம் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.