பிளஸ் 1 : தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!


தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 1 தேர்வு எழுத தத்கல் திட்டத்தில் ஜனவரி 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை நேற்று (ஜனவரி 12) அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, “மார்ச் மாதம் நடக்கவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வை, எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் விண்ணப்பிக்காதவர்கள் தத்கல் முறையில், ஜனவரி 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். இதற்காக, கல்வி மாவட்ட வாரியாக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.