ஜனவரி 15: இறைச்சி விற்கத் தடை!


திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி இறைச்சி விற்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேற்று (ஜனவரி 12) உத்தரவிட்டுள்ளார்.
இறைச்சி உண்ணக்கூடாது என்று திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தை இயற்றியுள்ளார். எனவே, திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.