பங்குகளை விற்குமா பதஞ்சலி நிறுவனம்?


ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் வூட்டன் நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தில் ரூ.3,200 கோடி வரையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனம் பற்பசை, தேன், நூடுல்ஸ், நெய், பூஜைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்நாட்டிலேயே ரசாயனக் கலப்பின்றித் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஹிந்துஸ்தான் யூனிலிவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்கி வரும் பதஞ்சலி, ஜவுளி, சோலார் உள்ளிட்ட துறைகளிலும் தடம் பதித்துள்ளதோடு, பல்வேறு துறைகளில் தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் வூட்டன் நிறுவனம் பதஞ்சலியில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.