தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை!


வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தற்போது வங்கக்கடலில் இலங்கை மற்றும் தமிழகக் கடற்கரையோரம் வரை வெளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சியாகப் பரவியுள்ளது. இதன் காரணமாக தமிழகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக அங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.
“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் லேசான மழை பெய்யும். மேலும் இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.