ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு!

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் மாதம் 6-ம் தேதி நடப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 26-ஆவது பொதுக்குழு வருகிற 06.03.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு, ஈரோடு, இராமநாதபுரம் புதூர், அக்ரஹாரம் To பவானி சாலையில் உள்ள பிளாட்டினம் மஹாலில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.