வாத்து மேய்க்கும் இடமாக மாறிய பேருந்து நிலையம்!

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக வேலூர் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் வாத்துக்களை மேயவிட்டிருக்கிறார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு போக்குவரத்து ஊழியர்கள் ஆறாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் திண்டாடிவருகின்றனர். சில இடங்களில் அதிகக் கட்டணத்தால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். இதனால், குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயங்கிவருகின்றன.
போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தார்கள். அதன் ஒரு பகுதியாக வேலூர் மண்டலப் போக்குவரத்து அலுவலகம் எதிரில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.