அமைப்புசாராத் துறைக்கு முக்கியத்துவம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்புசாராத் துறையில் உள்ள 40 கோடிப் பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
பாரதிய மேலாண்மை அபிவிருத்தி மற்றும் விசாகா ஒருங்கிணைந்த சமூக அமைப்புகள் சார்பில் கொச்சியில் திங்கட்கிழமை (ஜனவரி 8) நடைபெற்ற கைவினைப் பொருள்களின் மதிப்பீடு நிகழ்வில் கலந்துகொண்டு சந்தோஷ் கங்வார் கூறுகையில், "அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எஃப்., பேறுகால விடுப்பு, இதர சலுகைகள் கிடைக்கச் செய்யும் வகையில் தொழிலாளர் இழப்பீடு மற்றும் தொழில் விவாதச் சட்டம் ஆகியவற்றில் சில திருத்தங்கள் கொண்டுவரப்படும்.