இடைத்தரகர்களுக்கு அனுமதி இல்லை!

தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மார்ச் மாதம் முதல் இடைத்தரகர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூலம் வேலை எளிதில் முடிந்துவிடும் என்பதால் மக்களும் இவர்களை நாடுகின்றனர். ஆனால், இவர்களால்தான் அதிக அளவில் லஞ்சமும், ஊழலும் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு பதிவுத் துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.