புண்ணாக்கு ஏற்றுமதி 22% சரிவு!

கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியா 22 சதவிகிதம் குறைவான அளவில் புண்ணாக்கை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 3.01 லட்சம் டன் அளவிலான புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 22 சதவிகித சரிவுடன் 2.36 லட்சம் டன் அளவிலான புண்ணாக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் மொத்தம் 20.90 லட்சம் டன் அளவிலான புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் மொத்தம் 11.69 லட்சம் டன் அளவிலான புண்ணாக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.