ஆன்ட்ராய்டு வசதியுடன் குரோம்புக்!

ஏசர் நிறுவனத்தின் புதிய குரோம்புக்கில் ஆன்ட்ராய்டு வசதி கொண்டு வடிவமைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசர் (acer) நிறுவனம் மடிக்கணினி தயாரிப்பில் தற்போது புதுமையாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புதிய குரோம்புக்கில் USB-C சார்ஜிங் முறையையும் இதில் இணைத்துள்ளது. புதுமையாக வெளியாகும் பெரும்பாலான மாடல்கள் USB-C சார்ஜிங் கொண்டு தான் வெளியாகி வருகின்றன. அதனால் இந்த புதிய குரோம்புக்கிற்கு மொபைல் சார்ஜர் பயன்படுத்த முடியும்.
4GB RAM ,32GB இன்டெர்னல் வசதி கொண்டு வெளியாக உள்ள இந்த மாடல் ஆன்ட்ராய்டு செயலியை கொண்டுள்ளதால் பயனர்கள் எளிதில் தகவல்களை மொபைல் மற்றும் குரோம்புக்கிற்கு இடையே பரிமாறிக்கொள்ள முடியும்.11.6 இன்ச் தொடுதிரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் மிகவும் மெல்லியதாகவும், எடைக் குறைந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.