அரசு நிர்வாகத் தபால்கள்: கூரியரில் அனுப்பத் தடை!

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு நிர்வாகத் தபால்களை அனுப்பத் தனியார் கூரியர் நிறுவனங்கள்மூலம் அனுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக உயர்கல்வி செயலகத்தில் இருந்து, கூடுதல் செயலாளர் கோபால் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “அனைத்து கல்லூரிகள், பல்கலைகள், தொழில்நுட்ப இயக்குநரகம், கல்லூரி கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட அலுவலகங்களும், உயர்கல்வி துறை அலுவலகங்களும், தங்களின் நிர்வாகப் பணி தொடர்பாகத் தபால்களை அனுப்ப தனியார் கூரியர் நிறுவனங்களைப் பயன்படுத்த கூடாது. அரசின் விரைவு தபால் சேவையான, ‘ஸ்பீட் போஸ்ட்’டில் இருப்பது போன்ற விதிகள் தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு இல்லை. எனவே, பாதுகாப்பான முறைக்கு, விரைவு தபால் சேவைகளையே பயன்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.