நிலக்கரி ஏலம்: பிரீமியம் வருவாய் உயர்வு!

நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கோல் இந்தியா நிறுவனத்தின் மின்னணு நிலக்கரி ஏலத்தில் கிடைக்கும் பிரீமியம் தொகை 76 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கோல் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "2017-18ஆம் நிதியாண்டுக்கான மின்னணு ஏலத்தில் நிலக்கரி விலை 76 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது அறிவிக்கப்பட்ட தோராய விலையை விட அதிகமாகும். இந்நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 28.6 மில்லியன் டன் நிலக்கரியைக் கோல் இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியை விட 0.02 மில்லியன் டன் குறைவாகும். கடந்து ஆண்டு இதே காலகட்டத்தில் 28.8 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது" என்றார்.