விலை உயர்வால் கட்டுமானத் துறை பாதிப்பு!

மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் கட்டுமானத் துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தனியார் ரியல் எஸ்டேட் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் டெவலப்பர் சங்கக் கூட்டமைப்பின் (கிரெடாய்) உயரதிகாரி ஒருவர், கடந்த ஆறு மாதங்களாக மணல் விலை 75 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் இதனால் கட்டுமானச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு மணலின் விலை ஒரு கன அடிக்கு 35 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது அதன் விலை 135 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல முன்பு 270 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட்டின் விலை தற்போது 380 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஸ்டீல் விலையும் 34,000 ரூபாயிலிருந்து 47,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.