லெட்டர் பேடாக மாறும் செல்லாத ரூபாய் நோட்டுகள்!

பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் மதிப்பு இழந்த ரூபாய் நோட்டுகளை லெட்டர் பேடுகளாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது. அதற்குப் பதிலாக, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின.