தென்மேற்கு பருவமழை வழக்கதை விட அதிகம்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாகப் பெய்துள்ளதாகவும்,அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெய்யவேண்டிய சராசரி வடகிழக்கு பருவமழையின் அளவு 44 செ.மீ. ஆனால் 40 செ.மீ அளவு மட்டுமே பதிவாகி, 9 சதவீத மழை குறைந்தது. இருப்பினும் நெல்லை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இயல்பான மழையை விட அதிகம் பெய்துள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழை அளவை விடக் கூடுதலாக 42 சதவீதம் பெய்து இருக்கிறது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பாகப் பெய்ய வேண்டியது 79 செ.மீ. ஆனால் 94 செ.மீ. அளவு பெய்து, 19 சதவீதம் கூடுதல் மழையைப் பதிவு செய்துள்ளது.