வேலைவாய்ப்பு: சென்னை நகராட்சியில் பணி!

சென்னை நகராட்சி நிர்வாகத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 110
பணியிடம்: சென்னை
பணியின் தன்மை: சுகாதார ஆய்வாளர்
கல்வித் தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.95,400/-
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 19.01.2018