திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

Published On:

| By Balaji

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கொரோனா பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கும் விடுதிகளான பத்மாவதி நிலையம், விஷ்ணு சீனிவாசம் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயல் அதிகாரி ஜவகர் தலைமையில் நடந்தது. அப்போது பேசிய அவர், “திருப்பதி மருத்துவமனையில் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து அவ்வப்போது தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் கேட்டு கொண்டார். அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை குறித்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி நிலையம், திருப்பதியில் உள்ள விஷ்ணு சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறைகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஆண்டை போல பயன்படுத்தப்படும்.

திருப்பதி ரயில் நிலையம் பின்புறம் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது சத்திரத்தில் உள்ள பக்தர்கள் ஓய்வறைகள் அவசர தேவைக்கு பயன்படுத்தும் விதமாக மாற்றப்படும். சுவிம்ஸ் மருத்துவமனையில் தற்போது 450 படுக்கைகள் உள்ளன. ஐந்தாவது மாடியில் வேலைகளை விரைவில் முடித்து கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

எஸ்.வி. ஆயுர்வேத மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் கொரோனா பாதித்தவர்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்படும்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வானொலி மற்றும் ஒளிபரப்பு மூலம் கொரோனா குறித்து பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

திருமலையில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சுத்தம் செய்வதற்கான கிருமி நாசினி இருப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கும் விடுதிகளான பத்மாவதி நிலையம், விஷ்ணு சீனிவாசம் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share