வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை – அச்சத்தில் மக்கள்!

public

#காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் காடுகளை விட்டு கிராமத்திற்குள் நுழையும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் உத்தர் டினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுத்தை வீட்டிற்குள் புகுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நேற்று, ராய்கஞ்ச் பகுதியில் நுழைந்த சிறுத்தை ஒன்று சிலரை தாக்கியது. பின்னர், ஒரு பண்ணை வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, கிராம மக்கள்வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த சுக்னா வனத்துறைக் குழுவினர் விரைந்து வந்து, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர், சிறுத்தையைப்பிடிக்க நீண்ட நேரம் முயற்சி செய்தனர். சிறுத்தை தப்பிக்காமல் இருக்க அந்த அறையைச் சுற்றி நைலான் கயிறுக் கட்டப்பட்டது. அதன் பின்னர் சிறுத்தைப்பிடிக்கப்பட்டது என வனவிலங்கு பாதுகாவலர் பிரதீப் வியாஸ் தெரிவித்துள்ளார்.

சிறுத்தையால் தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சிறுத்தை பீகார் மாநிலத்தில் இருந்து இங்கு வந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தையை வடக்கு வங்கத்தில்உள்ள மஹானந்தா வனவிலங்கு சரணலாயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த வாரம், நெல்லை மாவட்டம் கடையம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதிக்குகொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *