{ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து!

public

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் 2013ஆம் ஆண்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசின் சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஊழலைப் பற்றி ஜெயலலிதா பேசலாமா என்று பொதுக் கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா சார்பில் அரசு வழக்கறிஞர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நேற்று (ஜூன் 29) விசாரித்த நீதிபதி ஹேமலதா ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *