* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டை, பாதாம் மற்றும் மிளகுத்தூளுடன் சேர்த்து வாரத்துக்கு இருமுறை சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது.
* பசி வந்து சாப்பிட வேண்டும். தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும். சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வந்து உறங்க வேண்டும்.
* காலையில் பல் துலக்குவதைவிட, இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்குச் செல்வது பற்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.
* இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று, விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும். அப்போது குளிப்பது உடம்புக்கு நல்லது.
* தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்குச் சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
* படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தொலைவில் வைத்துவிட வேண்டும்.
* உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்துக்கு மிக முக்கிய காரணியாகும்.
* காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும். தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.
* டீ, காபி போன்றவற்றை தவிர்த்து அதற்குப் பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவை அருந்தலாம்
* நாற்பது வயதுக்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவைக் குறைத்துக்கொள்வது நல்லது.
* தலைவலி, உடல்வலி என்று எதற்கெடுத்தாலும் மாத்திரை உட்கொள்வதைத் தவிர்த்தல் நலம். எண்ணெய்க் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது சிறந்தது
* கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற விஷயங்கள் உடல்நலத்தைப் பாதிக்க வல்லது. இவற்றைப் போக்கும் வழிமுறையை கண்டறிந்து சரிசெய்வது நலம்.
* எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு நிகழ்காலத்தை இழந்து விடாமல், ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையைக் கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைப்பிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம் – சொல் – செயல் – எழுத்து – வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.
* ஆண்டுக்கு சிலமுறை தினமும் செய்யும் வேலைகளில் இருந்து விடுபட்டுப் பிடித்த இடத்துக்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்.
அனைவருக்கும் போகி திருநாள் நல்வாழ்த்துகள்!�,