தேனி தொகுதியில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி ஆய்வுக்குரியது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி தேனி தொகுதியைத் தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. ஆனால், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
ஆனால், இது முறைகேடாகப் பெற்ற வெற்றி என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வம் தனது மகன் வெற்றிக்காக 500 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார் என்று அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று (மே 26) செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்றிருக்கும்போது தேனி ஒரு தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் வெற்றிபெற்றிருக்கிறார். அவர் எப்படி வெற்றிபெற்றார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே தேனியில் பண விநியோகம், விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. இன்னும் சொல்லப் போனால் வாக்கு எண்ணிக்கையில்கூட முரண்பாடுகள் இருப்பதாகத் தகவல்கள் வந்திருக்கிறது. இதை உரிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் தவறு ஏதும் கிடையாது” என்று தெரிவித்தார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.
�,”