பிரீமியர் பேட்மிண்டன் லீக் (PBL) போட்டியில், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது.
நேற்று(24.01.2020) சென்னை ஜவஹர்லால் நேரு இண்டோர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சென்னை அணிக்காக விளையாடிய சத்விக்சைராஜ் மற்றும் சிராக் ஜோடி, பெங்களூரு அணியை 4-3 என்ற கணக்கில் தோற்கடித்து, சென்னை அணி வெற்றிக்கு வழிவகுத்தார்கள்.
3-3 என்று போட்டியை பெங்களூரு அணி சமன் செய்த பிறகு, யார் வெற்றிபெற போகிறார்கள் என்று முடிவுசெய்யும் இறுதி செட்டில், அதிரடியாக விளையாடிய சென்னை அணி, பெங்களூரு அணியை 15-9 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று போட்டியை கைப்பற்றியது.
ஆட்டத்தை சிறப்பாக துவங்கிய காயத்ரி, பேட்மிண்டன் தரவரிசையில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கும் ‘தை சூ-யிங்’-கிடம் இருந்து முதல் செட்டை 15-13 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
�,