எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாகக் கூறி அவர்களைக் கைது செய்வதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், படகுகளைச் சேதப்படுத்துவதுமாக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரத்தை சேர்ந்த மரிய பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 18) 8 மீனவர்கள் மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் அன்றிரவு திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து தங்குகடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வத்தலகுண்டு தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினர் மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இந்தச் செயல்களை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும், மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.�,