போர், மனிதகுலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்முன்… மனிதகுலம், போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
– ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (29 மே 1917– 22 நவம்பர் 1963). ஐக்கிய அமெரிக்காவின் 35ஆவது குடியரசுத் தலைவர். இரண்டாம் உலகப் போரின்போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். சிறிது காலம் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சிகிச்சைப் பெற்று வந்த காலத்தில் ‘Profiles in courage’ என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்காக இவருக்கு 1957இல் ‘புலிட்சர் பரிசு’ வழங்கப்பட்டது. புலிட்சர் விருது பெற்ற ஒரே அமெரிக்கத் தலைவர் இவரே.
�,