சென்னை மாநகர பஸ்களில் அவசர உதவி பொத்தான், கேமராக்கள்!

Published On:

| By admin

சென்னை மாநகர பஸ்களில் திருட்டு சம்பவம், மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவது, சில்மிஷம் செய்தல் போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க மாநகர பஸ்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
2,500 மாநகர பஸ்களில் அவசர உதவி பொத்தான் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பஸ்ஸில் பயணம் செய்யும்போது விபத்து, மருத்துவ உதவி தேவைப்பட்டால் இந்த பொத்தானை அழுத்தலாம். அதே போல திருட்டு, சில்மிஷம் நடந்தாலும் உடனே பொத்தானை அழுத்தி உதவி கேட்கலாம். பொத்தானை அழுத்தியவுடன் அலாரம் அடிக்கும். பஸ்ஸில் நடக்கும் சம்பவத்தை உடனே அலர்ட் படுத்தும் வகையில் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கும்.
இத்தகைய வசதி முதற்கட்டமாக 500 பேருந்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாநகர பஸ்களில் விபத்து, திருட்டு சம்பவம் போன்ற ஏதாவது நடந்தால் இந்த பொத்தானை அழுத்தினால் உடனடியாக அது தொடர்பான பிரச்சினைக்கு உதவி கிடைக்கும்.
வழிப்பறி, திருட்டு என்றால் போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவார்கள். இதற்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை தலைமை அலுவலகத்தில் நிறுவப்படுகிறது. அங்கு இருந்தவாறு கண்காணிப்பார்கள்.
ஒவ்வொரு பஸ்ஸிலும் அவசர உதவி பொத்தான் நான்கும், கேமரா மூன்றும் நிறுவப்படுகிறது. இதன் மூலம் குற்றங்களைக் குறைக்க முடியும். பஸ்ஸில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதை தடுக்க இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். மருத்துவ உதவி தேவைப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வரும். இதுபோன்ற அவசர உதவிகள் பயணத்தின்போது பயணிகளுக்கு வழங்க இந்தத் திட்டம் இரண்டு மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share