சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் வில்லன் பற்றி உலவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.
வந்தா ராஜாவா தான் வருவேன் படத்துக்குப் பின் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இம்மாதமே தொடங்க வேண்டிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வில்லனாக நடிக்க போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
சிம்புவுக்கு கங்கை அமரன் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இதை மறுத்துள்ளார். இதைப் பற்றி அவர், “மாநாடு படத்தில் என் தந்தை வில்லனாக நடிக்கிறார் என்று பரவும் செய்தி பொய்யானது. வேறு நடிகரிடம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மாதிரியான வதந்திகள் பரவுவது வேடிக்கையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.�,