கிருஷ்ண தேவராயரின் நகைகள்: தகவல் ஆணையம் கேள்வி?

Published On:

| By Balaji

திருப்பதி திருமலை கோயிலுக்குக் கிருஷ்ண தேவராயர் வழங்கிய ஆபரணங்கள் எங்கே என மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு, திருப்பதி திருமலை கோயில் நிர்வாகம் உள்ளிட்டோர் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மனுவில் இருந்த கேள்வி

திருப்பதி கோயிலைத் தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்னவென்பதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிகேஎஸ்ஆர் அய்யங்கார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வழங்கிய தங்க, வைர ஆபரணங்கள் எங்கே எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக, மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொல்லியல் துறை அறிக்கை

விஜயநகர அரசர் கிருஷ்ண தேவராயர் கோயிலுக்கு ஆபரணங்கள் வழங்கியதாகக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் தகவல் இடம்பெற்றுள்ளது. ஆனால், அவ்வாறு ஆபரணங்கள் வழங்கப்படவில்லை என 2011ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள தொல்லியல் மற்றும் அருங்காட்சிய இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நோட்டீஸ்

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிலும், 1952ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வரும் கோயிலில் திருவாபரணம் பதிவுப் புத்தகங்களில் கிருஷ்ண தேவராயரிடம் நகை பெற்றதற்கான எந்த விவரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர் வழங்கிய ஆபரணங்கள் எங்கே? என விளக்கம் அளிக்க தொல்லியல் ஆய்வு, கலாச்சாரத் துறை, ஆந்திர மாநில அரசு மற்றும் திருப்பதி திருமலை கோயில் நிர்வாகம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share