வார விடுமுறை நாட்களை அட்டகாசமாகக் கொண்டாடிவிட்டு, திங்கட்கிழமை காலையில் எழுந்தால் உடம்பு அசத்தும். அப்படிப்பட்ட நேரத்தில் இந்தத் தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸைக் காலை உணவாக உட்கொள்ளும்போது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
**என்ன தேவை?**
தேங்காய் – ஒரு மூடி
கறிவேப்பிலை – 20 இலைகள்
ஊறவைத்த பாதாம்பருப்பு – 5.
**எப்படிச் செய்வது?**
தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஊறவைத்த பாதாம்பருப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் ஒரு வெள்ளைத் துணியில் அல்லது பெரிய வடிகட்டியில் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும். பிறகு தேங்காய் – கறிவேப்பிலை – பாதாம் விழுதை மீண்டும் சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் நன்றாகக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: இதில் கறிவேப்பிலைக்குப் பதிலாக, கொத்தமல்லி இலைகள் அல்லது புதினா இலைகள் சேர்த்து அரைக்கலாம்.
[நேற்றைய ஸ்பெஷல்: தயிர், மோர்… எது சிறந்தது?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/08/5)�,