எம்.பார்ம் படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, மே 8-ல் நடக்கும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் எம்.பார்ம் படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் மே 1-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மே 2-ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் மே 8-ம் தேதி இதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் எனவும் மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இணையதளத்தினைப் பார்க்கலாம்.�,

கல்வி-என்ன படிக்கலாம்? – M.pharm மே 8-ல் நுழைவுத் தேர்வு
+1
+1
+1
+1
+1
+1
+1