ஆளுநர் மாளிகை முற்றுகை: திருமாவளவன் கைது!

Published On:

| By Monisha

thol thirumavalavan arrested

ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய நடப்பாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையால் சர்ச்சை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பு சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

இதனால், திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், ஆளுநரை திரும்பப் பெறக் கூறி ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (ஜனவரி 13) திருமாவளவன் தலைமையில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ், கமியூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொண்டன.

3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு விசிகவினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றனர். ஆனால், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

protest against rn ravi thol thirumavalavan arrested

இதனால் போலீசாருக்கும், விசிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தின் போது “சமூகநீதி மண்ணில் சனாதனம் பரப்பும் சங்கி ஆளுநரே, இது நாகலாந்து, மேகாலயா அல்ல; தமிழ்நாடு! டெல்லிக்கு நடையைக் கட்டுங்கள்!” என்று முழக்கத்தை போராட்டகாரர்கள் எழுப்பினர்.

மோனிஷா

கனிமொழியின் ‘தமிழ்நாடு’ கோலம்: அண்ணாவின் புள்ளி கலைஞரின் வரிசை!

365 நாள் 655 நிகழ்ச்சி 9000 கி.மீ பயணம்: முதல்வர் ஸ்டாலின் ஷெட்யூல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share