உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் தெலங்கானா தவிர ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியுற்றது.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கூடியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி நேற்று (டிசம்பர் 22) முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 2024 தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்தது காங்கிரஸ் தலைமை.
இன்று (டிசம்பர் 23) காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
இதில் உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை என்றும் பொதுச்செயலாளராக தொடர்வார் என்றும் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக அவினாஷ் பாண்டே உத்தரப் பிரதேசத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒடிஷா பொறுப்பாளராக இருக்கும் அஜோய் குமார் தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளராக கூடுதலாக கவனிக்கவுள்ளார்.
ஆந்திரா, அந்தமான் மற்றும் நிகோபார் பொறுப்பாளராக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூரும், சத்தீஸ்கர் பொறுப்பாளராக சச்சின் பைலட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நெல்லை, தூத்துக்குடி சாலைகள் – பாதிப்பு ரூ.1000 கோடி : எ.வ.வேலு பேட்டி!
மதச் சார்பற்ற ஆம்னி முன்னணி: அப்டேட் குமாரு