3 நாள் பயணமாக இன்று (மே 30) பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை தந்துள்ளார்.
பிரதமர் மோடி வருகை:
ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ள 7ஆம் கட்ட தேர்தலின், இறுதிகட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வாரணாசியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து MI-17 வகை ஹெலிகாப்டர் மூலம் இன்று பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை தந்துள்ளார்.
பிரதமரின் பயண விவரம்:
மாலை 5.10 மணிக்கு கன்னியாகுமரி ஹெலிபேட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். சரியாக மாலை 5.20 மணிக்கு அங்கிருந்து தரைவழி பயணமாக ராக் ஜெட்டிற்கு செல்கிறார்.
மாலை 5.30 மணிக்கு ராக் ஜெட் சென்றடையும் பிரதமர் மோடி அங்கிருந்து படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு செல்கிறார்.
5.45 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு பாறையில் தியானம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து, ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு படகு வழியாக ராக் ஜெட்டி வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு 3.20 மணிக்கு ஹெலிபேட் தளத்திற்கு வருகை தருகிறார்.
அங்கிருந்து சரியாக பிற்பகல் 3.25 மணிக்கு MI- 17 வகை ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…