வடதமிழகத்திற்கும் சென்னைக்கும் முக்கியமான நாட்கள்: வெதர்மேன் அப்டேட்

Published On:

| By Monisha

pratheep john shares key dates for north TN

டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகள் சென்னை உட்பட வட தமிழகத்திற்கு முக்கியமான நாட்கள் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட வட தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகள் முக்கியமானவை என்றும் அந்த தேதிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ஜோ : விமர்சனம்!

உத்தரகாண்ட்: 41 தொழிலாளர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share