டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகள் சென்னை உட்பட வட தமிழகத்திற்கு முக்கியமான நாட்கள் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
#Chakkaram Update: ஒண்ணு ரெண்டு 🌀மூணு (3) நாள் (4) 🌀 அஞ்ச (5)🌀ஆறு எந்த ஊரு (North TN) நேரம் வந்தாச்சு மழை தந்தாச்சு கொஞ்ச நேரம் வெச்சு செய்யலாமா !!!!
3, 4 and 5 – Key dates for North TN including Chennai. Pa group Note pannunga !!!
— Tamil Nadu Weatherman (@praddy06) November 29, 2023
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட வட தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகள் முக்கியமானவை என்றும் அந்த தேதிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
உத்தரகாண்ட்: 41 தொழிலாளர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!