நிலவில் ஆய்வை துவங்கிய ரோவர்!

Published On:

| By Selvam

விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் பிரிந்து சென்று நிலவில் ஆய்வு பணியை துவங்கவுள்ளது.

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை ஜூன் 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது.

இதனை தொடர்ந்து உலக நாடுகளால் உற்றுநோக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நேற்று மாலை 06.04 மணிக்கு நிலவில் தரையிறங்கிறது. இதன் மூலம் நிலவின் தென்துருவ பகுதியில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தடம் பதித்த நாடு என்ற பெருமையையும் இந்தியா படைத்தது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும் இஸ்ரோ விண்வெளி மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தி நிலவின் புகைப்படங்களை அனுப்பியது. அதன்பிறகு விக்ரம் லேண்டரானது பிரக்யான் ரோவரை தரையிறக்குவதற்காக காத்திருந்தது. நிலவில் புழுதிப்படலம் இருந்ததால் 4 மணி நேரத்திற்கு பிறகு இரவு 10 மணியளவில் விக்ரம் லேண்டரின் சாய்தள அமைப்பு திறந்தது.

அதில் இருந்து பிரக்யான் ரோவர் பிரிந்து சென்று நிலவில் தடம் பதித்தது. இந்த பிரக்யான் ரோவரானது நிலவில் 14 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளது. ரோவர் விக்ரம் லேண்டருக்கு தகவலை அனுப்பும். லேண்டரானது இஸ்ரோ விண்வெளி நிலையத்திற்கு தகவலை கொடுக்கும்.

செல்வம்

செஸ் உலகக்கோப்பை: எப்படி இருக்கும் இன்றைய ’டை பிரேக்கர்’ ஆட்டம்?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share