பொதுமக்களுக்காக பல சிறு சேமிப்பு திட்டங்களை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது. இதில் தொடர் வைப்பு நிதி (RD) கணக்கு மிகவும் முக்கியமானது.
இந்திய அரசால் ஆதரிக்கப்படும் இந்த அஞ்சல் துறை RD திட்டம் பாதுகாப்பான சேமிப்பு முறையாகும். இது உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறது. குறைந்த தொகையில் முதலீடு செய்து காலப்போக்கில் ஒரு பெரிய தொகையை சேமிக்கலாம். இந்த திட்டத்தில் பெரியவர்கள் மட்டுமின்றி, 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும் தங்கள் பெயரில் கணக்கு தொடங்கலாம். மேலும், கூட்டு கணக்குகளும் (Joint Accounts) தொடங்கலாம்.
மாதா மாதம் ரூ.2000 வீதம் 5 ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) இந்த RD திட்டத்தில் முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ.1,42,732 கிடைக்கும். இதில் நீங்கள் முதலீடு செய்த ரூ.1,20,000 போக, மீதமுள்ள ரூ.22,732 வட்டியாக கிடைக்கும். இந்த வைப்பு நிதிக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டு, அசலுடன் சேர்க்கப்படும்.
இதனால் குறைந்த ஆபத்து மற்றும் நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இந்த திட்டம் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது. தற்போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க அனுமதிக்கப்படவில்லை.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- தற்போது ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு அசலுடன் சேர்க்கப்படும்.
- முதலீட்டு காலம் 5 ஆண்டுகள் (60 மாதங்கள்).
- குறைந்தபட்ச முதலீடு மாதம் ரூ. 100.
- அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.
- பணம் செலுத்தும் முறை ரொக்கம், காசோலை அல்லது ஆன்லைன் பரிமாற்றம் மூலம் செலுத்தலாம்.
- உங்கள் சேமிப்புக் கணக்குடன் இணைத்து, மாதாந்திர தவணையை தானாகவே பிடித்தம் செய்யும்படி அமைக்கலாம்.
- முன்கூட்டியே பணம் செலுத்தும் வசதி இதில் உள்ளது. 5 ஆண்டுகள் வரை தவணைகளை முன்கூட்டியே செலுத்தலாம்.
இந்த RD திட்டம் பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறைந்த தொகையில் தொடங்கி நீண்ட காலத்திற்கு சேமித்து நல்ல வருமானத்தைப் பெறலாம்.
