தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக நிர்வாகிகள் சார்பில் கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் 19ஆம் தேதி விஜயகாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,