பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் துயரங்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் நாள்தோறும் பேசி வருகிறார்
தற்போது, இட ஒதுக்கீடு மற்றும் தகுதி (merit) தொடர்பான வாசகரின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். தான் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்றுவிட்டதாகவும், தன்னுடைய குழந்தைகளும் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற வேண்டுமா என்று அந்த வாசகர் எழுப்பிய கேள்விக்கு ஜெயரஞ்சன் இன்று (ஜூலை 24) விரிவாக பதிலளித்தார்.
இட ஒதுக்கீட்டின் வரலாறை விவரித்த அவர், சமத்துவமின்மையை சமத்துவமாக மாற்றுவதற்கும், அதிகாரமற்றவர்களை அதிகாரத்திற்குள் கொண்டு வருவதற்கும் ஏற்படுத்தப்பட்ட கருவிதான் இட ஒதுக்கீடு என்றார்.
**முழுக் காணொலியையும் கீழே காணுங்கள்**
�,”