தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 20) ஆளுநர் ரவியை சந்தித்தார்.
அவரோடு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் களான கே.பி முனுசாமி, வைத்திலிங்கம், ஜெயகுமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி…நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆளுநரிடம் விளக்கமாக தெளிவாக புகார் மனு அளித்து இருக்கிறோம். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக தில்லுமுல்லு செய்து ஜனநாயகப் படுகொலை செய்து வெற்றி பெற்றவர்களை எல்லாம் தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அரசின் கைப்பாவையாக செயல்பட்டிருக்கிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தேர்தல் பணிகளை முறையாக கவனிக்கவில்லை. எங்கள் கட்சியினர் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க சென்றபோது அவர்களைச் சந்திக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திமுகவினர் வெற்றி பெற்றால் உடனுக்குடன் அறிவித்த தேர்தல் அதிகாரிகள் அதிமுகவினர் வெற்றிபெற்றால்
அதை அறிவிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர். பல்வேறு இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற
அதிமுகவினரை தோல்வியுற்றவர்கள் ஆக அறிவித்திருக்கிறார்கள்.
எந்தெந்த இடங்கள் என்னென்ன புகார்கள் என்பதை எல்லாம் விளக்கமாக பட்டியலிட்டு ஆளுநரிடம் அளித்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று
வலியுறுத்தி இருக்கிறோம்.
தேர்தல் இப்படித்தான் நடைபெறும் என்று கருதிதான் நாங்கள் முன்கூட்டியே தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் நாடினோம். வாக்கு என்னும் இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. அரசாங்கமும் அதை நடைமுறைப் படுத்தவில்லை. மாறாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள்” என்று தெரிவித்தார் பழனிச்சாமி.
**வேந்தன்**
�,”