ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட அன்றைய நடவடிக்கைகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பேசி வருகிறார்.
இதனிடையே ஊரடங்கு தொடர்பாக தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் உடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘ஊரடங்கு என்பது தவறான முடிவுகளை நோக்கி நகர்ந்துள்ளது. கொரோனா தொற்றை குறைப்பதற்கு பதிலாக ஜிடிபி வளர்ச்சியை குறைத்துள்ளது” என்று ராகுல் தெரிவித்திருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு இன்று (ஜூன் 7) பேசிய ஜெயரஞ்சன், கொரோனாவால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்படப் போகும் சரிவு, வேலைவாய்ப்பின்மை குறித்த விமர்சனங்களை தனது பார்வையில் முன்வைத்துள்ளார்.
முழு காணொலியையும் கீழே காணலாம்.
�,”