மோடியின் வலைதள பக்கங்களைக் கையாளப்போகும் பெண் யார்?

Published On:

| By Balaji

பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கங்களை மார்ச் 8ஆம் தேதி விட்டுவிடுவதாக முடிவு செய்துள்ளேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் கலவையான பல விமர்சனங்கள் வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற வேண்டாம்’ என்றே பலர் கருத்து தெரிவித்தனர். இதுமட்டுமின்றி பிரதமர் சமூக வலைதளங்களை விட்டு முழுமையாக மார்ச் 8ஆம் தேதி வெளியேற போகிறார் என்று தான் அனைவரும் கருதினர்.

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று (03/03/2020) இதுதொடர்பாக மற்றொரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். இதன்மூலம் மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களைக் கையாளுவதற்கான வாய்ப்பை ஒரு சிறந்த பெண்ணுக்கு அளிக்க முடிவு செய்துள்ளார் மோடி என்பது தெரியவந்தது. இது குறித்து அவர், “நரேந்திர மோடியின் வலைதள பக்கங்களை ஒரு நாள் முழுவதும் கையாளுவதற்கான வாய்ப்பு. SheInspiresUs என்ற தலைப்போடு ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில், நீங்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் சிறந்த பெண்மணியா? அல்லது உங்களைக் கவர்ந்த, மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களை உங்களுக்குத் தெரியுமா? அவர்களைப் பற்றிப் பதிவிடுங்கள். இந்த பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பெண்களுக்குப் பிரதமரின் சமூக வலைதள பக்கங்களைக் கையாளும் வாய்ப்பு வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

This Women’s Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.

Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEu

— Narendra Modi (@narendramodi) March 3, 2020

அறிவிப்பு வெளியானதும் பல்வேறு தரப்பிலிருந்தும் தங்களுக்குப் பிடித்த பெண்களைப் பற்றிப் பதிவுகள் குவியத் துவங்கிவிட்டன. பிரதமரின் வலைதள பக்கங்களைக் கையாளப் போகும் பெண் யார் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும்.

**பவித்ரா குமரேசன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share