ஆக்சிஜன் ஆலைகள் அனைத்தையும் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில், டெல்லியும் ஒன்று. அங்கு கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வரும் வேளையில், படுக்கை, ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருக்கின்றது என டெல்லியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளும் புகார் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை ஒன்று வைத்தார்.
மற்ற மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு ஆக்சிஜன் ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. அதனால், அனைத்து ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளையும் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ராணுவ பாதுகாப்புடன் டெல்லியிலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும். டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதி, வென்டிலேட்டர் உள்ளிட்டவை பற்றாக்குறையாக இருப்பதாகவும் என தெரிவித்தார்.
தடுப்பூசி மத்திய அரசுக்கு கிடைக்கும் விலையிலே, மாநில அரசுகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
**வினிதா**
.�,