jகனகராஜ் மரணம்: சகோதரர் உட்பட 2 பேர் கைது!

politics

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரண விவகாரத்தில் அவரது அண்ணன் உட்பட 2 பேரைத் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கொடநாடு காவலாளி ஓம்பகதூர் கொலை மற்றும் எஸ்டேட் பங்களாவிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் இறந்தது, விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கினர்.

சேலம் எஸ்பி அபினவ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி முதல் ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கனகராஜின் உறவினர் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொடநாடு வழக்கு தொடர்பாகத் தடயங்களை அழித்ததாகச் சேலம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் சகோதரர் தனபால், அவருடைய உறவினரான ஆத்தூரைச் சேர்ந்த ரமேஷ் இருவரையும் போலீசார் நீலகிரி மாவட்டம் சோலூர் மட்டம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து கைதான இரண்டு பேரையும் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா இரண்டு பேரையும் வரும் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இரண்டு பேரும் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பே இது தொடர்பான தகவல் ரமேஷ் மற்றும் தனபாலுக்குத் தெரிந்து உள்ளதாகவும், அதனை அவர்கள் விசாரணையில் தெரிவிக்காமல் மறைத்ததாகவும், எனவே இருவர் மீதும் சாட்சிகளை மறைத்தல், அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *