lஜெ சிலை: முதல்வருக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்

politics

u

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை நல்ல முறையாகப் பராமரிக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை, காமராஜர் சாலையிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டியது. இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ஜெ சிலை உரிய முறையில் பராமரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள ஓபிஎஸ், “ ஜெயலலிதா சிலையும், அந்த சிலை அமைந்துள்ள வளாகமும் பராமரிக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், அரசின் சார்பில் சிலை மற்றும் நினைவகங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய முறையில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றும், ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை அரசின் சார்பில் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி அளித்திருக்கிறார்.

என்னுடைய கோரிக்கையை ஏற்று சென்னை, காமராஜர் சாலை, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் முழு திருவுருவச் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை உயர் கல்வித்துறை அமைச்சரின் மூலம் தெரிவித்த தமிழக முதல்வருக்கு எனது நன்றி” என கூறியுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *