அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து!

politics

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று (ஆகஸ்டு 6) ரத்து செய்யப்பட்டுள்ளது.

2011-16 அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி வாஙகித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் மத்திய குற்றப் பிரிவுக்கு சென்றனர். அதன் பேரில் செந்தில்பாலாஜி மீது வழக்குப் பதியப்பட்டது. பிறகு இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது

சில நாட்களுக்கு முன்பு கூட இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, “அமைச்சர் என்பதால் வழக்கில் இருந்து ஆஜராவதற்கு விலக்கு அளிக்க முடியாது” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சண்முகம் என்பவர் இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்று (ஆகஸ்டு 6) விசாரணைக்கு வந்தபோது புகார் கொடுத்தவர்கள் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகி தாங்கள் கொடுத்த பணம் தங்களுக்குத் திரும்பக் கிடைத்துவிட்டதால், தங்களின் புகார்களை திரும்பப்பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி இவ்வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

இன்றே செந்தில் பாலாஜி மீதான வழக்கு எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்திருப்பதை சுட்டிக் காட்டினார்கள். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகலை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்டு 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *