}தமிழகத்தில் 30 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு!

politics

8

தமிழகத்தில் இன்று(மே 29) ஒரே நாளில் 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 20,39,716 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 16,849 பேர் ஆண்கள், 13,167 பேர் பெண்கள்.

அரசு மருத்துவமனையில் 305 பேர், தனியார் மருத்துவமனையில் 181 பேர் என 486 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, கொரோனாவால் 23,261 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 1,74,349 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 31,759 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 17,06,298 பேர் குணமடைந்துள்ளனர். 3,10,157 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 2705 பேரும், செங்கபட்டில் 1314 பேரும், கோவையில் 3692 பேரும், ஈரோட்டில் 1743 பேரும், சேலத்தில் 1492 பேரும், திருவள்ளூரில் 1072 பேரும், திருப்பூரில் 1697 பேரும், திருச்சியில் 1099 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 85 பேரும், செங்கல்பட்டில் 49 பேரும், கோவையில் 20 பேரும், திண்டுக்கல்லில் 24 பேரும், காஞ்சிபுரத்தில் 26 பேரும், திருவள்ளூரில் 21 பேரும், திருப்பூரில் 20 பேரும், ராணிபேட்டையில் 19 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *